|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||
* * *
வலைப்பூ அன்பர்களுக்கு,
“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 10
***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்***
இவ்வெளியோன் அறிந்தவரையில் இந்த மந்திரம் மிக பலமானது மிக சுகமானது! இதை இவ்வெளியோனுக்கு தங்கவண்ண கும்பமுனி பலகாலங்களுக்கு முன் கருணையுற்று அருளியதாகும். இதன் பயனோ என்னவோ ஆதிபரையின் பேருளால் பல பல நன்மைகள் இவ்வெளியோனுக்கு சித்தித்தது. இதை அவர்தம் பொற்பாதம் பணிந்து, அவர் அனுமதியின் காண் இங்கு வெளியிடுகிறேன் அனுஷ்டித்து நலம் பெருவீரே!
“ஆனந்தரூபி” எனும்பொழுது ஸ்ரீ லலிதாம்பிகையும் குறிக்கிறது.
உருவிடும்பொழுது நம: என்றும், ஹோமிக்கும்போது ஸ்வாஹ: என்றும் சொல்லவும்.
ஆக ஓரே மந்திரத்தின் மூலம் அம்பிகையின் எல்லா ஸ்வரூபங்களையும் சித்தித்து கொள்கிறோம் அல்லவா! கும்பமுனியின் கருணைக்கு அளவேது! (கும்பமுனி – அகத்தியர்)
இம்மந்திரத்தை தேகசுத்தியுடன், செம்பட்டுடுத்தி, நீரு பூண்டு காலையும் மாலையும் தீபமேற்றி, கிழக்கு முகமாக அமர்ந்து 1008 முறை உருவிட, பின்னர், பாலும், கல்கண்டு, பேரீச்சம்பழம் நிவேதனம் செய்து நிவேதித்த. ப்ரசாதத்தை உட்கொள்ள. சித்தியாகும் வரை நிஷ்டையுடன் அனுஷ்டிக்க.
இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்
You must be logged in to post a comment.