இப்பொழுது ஸ்ரீ பாலா வித்யை பற்றி சொல்கிறேன்! இந்த மந்திரத்தை ஸேவை செய்யும் உபாஸகன், வித்யையில் ப்ரஹஸ்பதிக்கு சமமானவாகவும், தன சம்பத்தில் குபேரனுக்கு சமமானவனாகவும் ஆகிறான்!
இந்த மந்திரமானது “ஐம் க்லீம் சௌ:” எனும் முப்பீஜ மந்திரமாகும். இதற்கு பராசக்தி தேவியின் சாபம் மற்றும் கீலனம் உளது. அதுகாண் இது சித்தியாகாது. இதை சாபோத்தாரணம் மற்றும் உத்கீலனம் செய்தே உபயோகிக்கவேண்டும்.
இப்பொழுது சாப விமோசனா மந்திரத்தை விவரிக்கிறேன்!
“ஐம் ஐம் சௌ: க்லீம் க்லீம் ஐம் சௌ: சௌ: க்லீம்”. இது ஒன்பது பீஜங்களை கொண்டது ஆகும், இதை 108 முறை உச்சரிக்க, பாலா திரிபுரசுந்தரி மந்திரம் சாப விமோசனம் அடைகிறது.
இனி உத்கீலனா மந்திரத்தை கவனிப்போம்! “ஓம் க்லீம் நம:” எனும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்க, மந்திரம் உத்கீலனமாகிறது.
இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்
You must be logged in to post a comment.